follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஹிக்கடுவையில் அதிக ஒலி எழுப்பலுக்கு வருகிறது தடை

ஹிக்கடுவையில் அதிக ஒலி எழுப்பலுக்கு வருகிறது தடை

Published on

ஹிக்கடுவையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதித்த நீண்ட தூர சேவை பஸ்கள் அதிக ஒலி எழுப்பி பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நகரின் வழியாக செல்லக்கூடிய வேகத்தடை மணிக்கு 40 கி.மீ ஆக உயர்த்தப்பட்டு, அதிக ஒலி எழுப்பலை தடுக்கும் பலகைகள் பொருத்தப்பட்டு, அது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஹிக்கடுவ பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த தீர்மானங்களை எட்டியுள்ளார்.

ஹிக்கடுவை சுற்றுலா நகரம் என்பதற்கான அடையாளங்களை சிங்கள மொழியிலும் தயார் செய்யுமாறு தென் மாகாண ஆளுநர் போக்குவரத்து பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ருஹுனு சுற்றுலா பணியகம் ஆகியவற்றுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஹிக்கடுவ பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக பேணுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...