follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஹிக்கடுவையில் அதிக ஒலி எழுப்பலுக்கு வருகிறது தடை

ஹிக்கடுவையில் அதிக ஒலி எழுப்பலுக்கு வருகிறது தடை

Published on

ஹிக்கடுவையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதித்த நீண்ட தூர சேவை பஸ்கள் அதிக ஒலி எழுப்பி பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நகரின் வழியாக செல்லக்கூடிய வேகத்தடை மணிக்கு 40 கி.மீ ஆக உயர்த்தப்பட்டு, அதிக ஒலி எழுப்பலை தடுக்கும் பலகைகள் பொருத்தப்பட்டு, அது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஹிக்கடுவ பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த தீர்மானங்களை எட்டியுள்ளார்.

ஹிக்கடுவை சுற்றுலா நகரம் என்பதற்கான அடையாளங்களை சிங்கள மொழியிலும் தயார் செய்யுமாறு தென் மாகாண ஆளுநர் போக்குவரத்து பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ருஹுனு சுற்றுலா பணியகம் ஆகியவற்றுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஹிக்கடுவ பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக பேணுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...