follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1எட்கா ஒப்பந்தம் தொடர்பான அரசின் நிலைப்பாடு

எட்கா ஒப்பந்தம் தொடர்பான அரசின் நிலைப்பாடு

Published on

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது எட்கா உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை அல்லது அது எந்த காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பல தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இரு நாடுகளுக்கு இடையே முன்பு ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி நாங்கள் செயல்படுகிறோம். அதை புதுப்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை சந்தை விரிவாக்கத்துடன் புதுப்பித்து முன்னேற்றுவோம் என்று நம்புகிறோம். மேலும் எட்கா தொடர்பான விவாதத்தை தொடருங்கள் இல்லையேல் இந்திய விஜயத்தின் பின்னர் எட்கா ஒப்பந்தம் அமுல்படுத்தப்படும்… அது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம். நாங்கள் எந்த நேரத்திலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான் எங்களது அடிப்படைக் கொள்கை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...