follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுஇந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

இந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

Published on

பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேட்டி அளித்த ஜடேஜா முழுவதுமாக ஹிந்தியில் பேசியுள்ளார். இதனையடுத்து ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மட்டுமே. இதனால் ஜடேஜா இந்தியில் பேசினார்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை கிளப்பவே எப்போதும் முயற்சி செய்கின்றன என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய செய்தியாளர் சுபயன் சக்ரவர்த்தி கூறினார்.

அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...