follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டு சம்பவங்களை அறிய STF உதவியை நாடும் போக்குவரத்து அமைச்சு

அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டு சம்பவங்களை அறிய STF உதவியை நாடும் போக்குவரத்து அமைச்சு

Published on

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள மின் வடங்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடி படையினரின் உதவியை பெறுவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த அதிவேக நெடுஞ்சாலையில் நீண்டகாலமாக போதைப் பொருள் பாவனையாளர்களால் இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை கருத்திற் கொண்டு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் பணிப்புரைக்கமைய, விசேட அதிரடி படையினரின் உதவியை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று, குறித்த பகுதிகளில் புதிதாக மின் வடங்கள் பொறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...