follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைக்க தீர்மானம்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைக்க தீர்மானம்

Published on

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) மறுசீரமைத்து, முழுமையான புலனாய்வுப் பிரிவாக மீண்டும் நிறுவுவதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஒரு பணிப்பாளரின் கீழ் தனி புலனாய்வு பிரிவாக இந்த பிரிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​நிதிக் குற்றப்பிரிவு (FCID) என்பது குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் முறைப்பாடுகளை விசாரிப்பது கடினமான பணியாக இருப்பதால், நிதிக் குற்றப் பிரிவு மற்றுமொரு பிரிவாக மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிதிக் குற்றப் பிரிவினூடாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...