follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்கு இம்முறை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்கு இம்முறை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்

Published on

அடுத்த வருடம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளைக் காணும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த வருடம் சுதந்திர தின நிகழ்வைக் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுமார் 1,600 அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் குறைந்த செலவில் சுதந்திர விழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...