follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP2"பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுங்க.. அதுபோதும்"

“பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுங்க.. அதுபோதும்”

Published on

தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“..மக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்துள்ளனர். இந்தநிலையில், அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்போது செய்வதாகக் கூறுவது போல, சிறிய கார்களிலோ அல்லது பேருந்துகளிலோ பயணிப்பதில் தமக்கு பிரச்சினையில்லை.

எனினும் அதனைவிட, அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே முக்கியமானது.

நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும்..” என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் ஒரு புற்றுநோய் – வேரிலேயே அழிக்கப்பட வேண்டும் – ஈரான் கடும் விமர்சனம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய...

சபாரி ஜீப்களில் டிக்கெட் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

பொலன்னறுவை வனவிலங்கு மண்டலத்தைச் சேர்ந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காவின் இரண்டு வாயில்களிலும் நெரிசலைக்...

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும்...