follow the truth

follow the truth

January, 16, 2025
HomeTOP1"கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம்"

“கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம்”

Published on

கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீண்ட இரும்புச் சங்கிலியால் கைவிலங்கிடப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற அறையில் வரிசையாக ஆஜர்படுத்தியமைக்காக சிறைச்சாலை அதிகாரிகளை குற்றம் சுமத்திய போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

சந்தேகநபர்களை மனிதர்களைப் போன்று நடத்த வேண்டும் என வலியுறுத்திய நீதவான், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் விடுமுறை என்பதால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்றப் பெயரின் வழக்கு எண் 03 நீதிமன்றில் அழைக்கப்பட்டது. விளக்கமறியலில் ஆஜர்படுத்தப்பட்ட சுமார் நாற்பது சந்தேக நபர்கள் ஒரே சங்கிலியில் கைவிலங்குகளுடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்ற அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதிகளை பார்த்த நீதவான், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியதுடன், கைதிகளை மனிதர்களாக நடத்துமாறு கடுமையாக எச்சரித்தார்.

நடந்த சம்பவத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர். நீதவான் பிறப்பித்த உத்தரவின் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் கைவிலங்குகளுடன் நீதிமன்ற அறையில் இருந்த கைதிகளின் சங்கிலிகளை அகற்றுவதைக் காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...