follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்ஒமிக்ரோன் பரவல் - நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு

ஒமிக்ரோன் பரவல் – நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு

Published on

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் முழு ஊரடங்கு விதித்து அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்த் நாட்டிலும் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஜனவரி 14 வரை மூடப்படும் என்றும், பள்ளிகள் குறைந்தபட்சம் ஜனவரி 9 ஆம் திகதி வரை மூடப்படும் என்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...