follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1அரச இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுக்க புதிய வேலைத்திட்டம்

அரச இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுக்க புதிய வேலைத்திட்டம்

Published on

அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் மற்றும் அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியன அண்மையில் முடக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதனிடையே அண்மையில் முடக்கப்பட்ட அரச அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்த தரப்பினரால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டது என்பது குறித்து இதுவரையில் உரியத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...