follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவார்கள்

இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவார்கள்

Published on

முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை பேச்சுவார்த்தையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின் மூலம் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மியன்மார் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு இந்த குழுவின் தகவல்களை வழங்கியுள்ளது. சட்ட நடைமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். மியன்மார் அரசுடன் கலந்துரையாடல் இடம்பெறும் இந்நிலையில் நாடு கடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முடியும் வரை அகதிகள் தடுத்து வைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டிசம்பர் 19ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையை நோக்கி 115 ரோஹிங்கியாக்களை ஏற்றிக்கொண்டு பலநாள் படகு ஒன்று மிதந்த வந்த நிலையில் கடற்படை அதனை கைது செய்தது.

படகில் 103 புகலிடக் கோரிக்கையாளர்களும் 12 பணியாளர்களும் இருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...