follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவார்கள்

இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவார்கள்

Published on

முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை பேச்சுவார்த்தையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின் மூலம் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மியன்மார் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு இந்த குழுவின் தகவல்களை வழங்கியுள்ளது. சட்ட நடைமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். மியன்மார் அரசுடன் கலந்துரையாடல் இடம்பெறும் இந்நிலையில் நாடு கடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முடியும் வரை அகதிகள் தடுத்து வைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டிசம்பர் 19ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையை நோக்கி 115 ரோஹிங்கியாக்களை ஏற்றிக்கொண்டு பலநாள் படகு ஒன்று மிதந்த வந்த நிலையில் கடற்படை அதனை கைது செய்தது.

படகில் 103 புகலிடக் கோரிக்கையாளர்களும் 12 பணியாளர்களும் இருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...