follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் நிலையில்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் நிலையில்!

Published on

கொள்வனவு செய்யப்பட்ட கச்சா எண்ணெய் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வழக்கமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்து இறக்குமதி செய்ய 90 நாட்கள் ஆகும், ஆனால் கடந்த நாட்களில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி நெருக்கடியால் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள கச்சா எண்ணெய் ஜனவரி 25ஆம் திகதிக்குள் நாட்டை வந்து சேரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து கச்சா எண்ணெய் இலங்கைக்கு வரும் வரை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...