follow the truth

follow the truth

January, 21, 2025
Homeஉள்நாடுபேருந்துகளில் சிவில் உடையில் இருப்பதை விட வீதியில் இருந்து சட்டத்தை அமுல்படுத்துங்கள்

பேருந்துகளில் சிவில் உடையில் இருப்பதை விட வீதியில் இருந்து சட்டத்தை அமுல்படுத்துங்கள்

Published on

பேருந்துகளில் சிவில் உடை அணிந்து சாரதிகள் மேற்கொள்ளும் குற்றங்களை கண்காணிப்பதை நிறுத்தி வீதியில் இருந்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தவறான பாதையில் செல்லும் சாரதிகளை அவதானித்து சட்டத்தை அமுல்படுத்தும் திறமை பொலிஸாருக்கு இருப்பதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேருந்துகளில் இருந்து விதிமீறல் செய்யும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சாரதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், இந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பேருந்து மறியல் போராட்டம் கூட நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, சில சாரதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூட முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைய நிலைமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரூந்துகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களை அகற்றுமாறு தமது சங்கம் கூட பேரூந்து உரிமையாளர்களுக்கு அறிவித்து வருவதாகவும், கடந்த காலங்களில் துணைக்கருவிகளை பொருத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...