follow the truth

follow the truth

January, 18, 2025
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி?

சாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி?

Published on

ஒன்பதாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான அணிகளை வருகிற 12ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பெப்ரவரி 12-வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் எம்எஸ் டோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வருகிறது.

2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணத்திற்கான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டார். அதில் இந்திய அணி கிண்ணத்தினை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல்...

அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் : பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதைத் தொடர்ந்து,...

ஐசிசி தரவரிசையில் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி.யின் ஆடவர் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவே...