follow the truth

follow the truth

January, 18, 2025
HomeTOP2ஆப்கானிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என ஆலோசனை

ஆப்கானிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என ஆலோசனை

Published on

எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை தவிர்க்குமாறு தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கன்சி அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அவர் இவ்வாறு கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் நடத்தும் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரே குழுவில் விளையாடுகின்றன.

இந்த போட்டி பெப்ரவரி 21ம் திகதி கராச்சியில் நடைபெற உள்ளது.

தனது பிரேரணைக்கு ஏனைய நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளும் சர்வதேச கிரிக்கெட் பேரவையும் உடன்படும் எனவும் தென்னாபிரிக்க விளையாட்டு அமைச்சர் தனது தீர்மானத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானுடன் விளையாடுமா… இல்லையா? குறித்த இறுதி முடிவு எடுப்பது தனது பொறுப்பு அல்ல என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்கு இருந்தால் கண்டிப்பாக ஆப்கானிஸ்தானுடன் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததால், நாட்டில் பெண்களின் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம்

பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு...