follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1வாகன இறக்குமதி வரி வரம்புகளை மாற்ற வேண்டாம் என கோரிக்கை

வாகன இறக்குமதி வரி வரம்புகளை மாற்ற வேண்டாம் என கோரிக்கை

Published on

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்பு மாற்றப்பட்டால், அது சந்தையில் வாகனங்களின் விற்பனை விலையையும் பாதிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் மதிப்பிடப்பட்ட விலைகளை கணக்கிட முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் வரி விகிதங்களை அதிகரித்தால், வாகனங்களின் விலைகள் தானாகவே உயரும் என்றும், வரி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் விலைகள் குறையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, ​​உள்நாட்டு சந்தையில் ஜப்பானிய காருக்கு விதிக்கப்படும் வரி அதன் உற்பத்தி விலையில் தோராயமாக 300% ஆகும்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக விநியோகம் குறைந்ததால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்படுவதால், இயல்பு நிலைக்கு திரும்பும் என சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...