follow the truth

follow the truth

September, 1, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராகும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராகும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

Published on

யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக தற்போதைய பிரேரணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடுகிறோம். கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், கூட்டுப் பொறுப்பில் சிக்கல் இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டும்.

இது குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் தனித்தனியாக கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், நாம் அளிக்கும் வாக்கு தீர்மானத்திற்கு எதிராகவே அமையும்.

இதேவேளை, தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடி செல்ல மாட்டோம், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க மாட்டேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடுவது என்பது இந்த வேளையில் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று என திரு பசில் ராஜபக்ச அமைச்சரவையில் மிகத் தெளிவாகத் தெரிவித்தார்.

இறக்குமதியை கட்டுப்படுத்துவதே எங்கள் முன்மொழிவு. ஆனால், இறக்குமதியை கட்டுப்படுத்தக் கூடாது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...