follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் தீர்வு

கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் தீர்வு

Published on

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து, ​​பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர கூறுகையில், பிரச்சினைக்குரிய இரு குழுக்களையும் பரீட்சைத் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள மதிப்பீட்டு நிலையத்திற்கு அழைத்து, அங்கிருந்து விடைத்தாள் மதிப்பீட்டை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் கவுன் அணிந்து வந்ததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

நேற்று (16) பாடசாலை நாள் என்பதால், சேலை அணிய வேண்டியிருந்தாலும், அவர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலையின் அதிபர் அவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...