follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

Published on

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கக்கார எந்த தொழில்முறை லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை, எனவே இது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் அவரது முதல் தொடராகும்.

இதேவேளை இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வாட்சனும், இங்கிலாந்து அணியின் தலைவராக இயோன் மோர்கனும், மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவராக பிரையன் லாராவும், தென்னாபிரிக்கா அணியின் தலைவராக ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மும்பை, ராய்ப்பூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...