follow the truth

follow the truth

February, 14, 2025
HomeTOP2சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

Published on

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கக்கார எந்த தொழில்முறை லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை, எனவே இது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் அவரது முதல் தொடராகும்.

இதேவேளை இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வாட்சனும், இங்கிலாந்து அணியின் தலைவராக இயோன் மோர்கனும், மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவராக பிரையன் லாராவும், தென்னாபிரிக்கா அணியின் தலைவராக ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மும்பை, ராய்ப்பூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸ் சதம் விளாசினார்

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார். இலங்கை மற்றும்...

சட்டப் பரீட்சையில் நாமல் காப்பி அடித்தாரா? சிஐடி விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக...

ரணிலும் மைத்திரியும் கொள்ளுப்பிட்டியில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கநேற்று (13) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில்...