follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

Published on

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கக்கார எந்த தொழில்முறை லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை, எனவே இது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் அவரது முதல் தொடராகும்.

இதேவேளை இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வாட்சனும், இங்கிலாந்து அணியின் தலைவராக இயோன் மோர்கனும், மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவராக பிரையன் லாராவும், தென்னாபிரிக்கா அணியின் தலைவராக ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மும்பை, ராய்ப்பூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...