follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP1மனுஷ CID இல் வாக்குமூலம் வழங்கத் தயார் என நீதிமன்றுக்கு அறிவிப்பு

மனுஷ CID இல் வாக்குமூலம் வழங்கத் தயார் என நீதிமன்றுக்கு அறிவிப்பு

Published on

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) அறிவித்துள்ளார்.

மனுஷ நாணயக்காரவின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ், தம்மை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுவிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தனது கட்சிக்காரரை அழைத்து வாக்குமூலம் பெறுமாறும் அதன் பின்னர் இந்த மனுவின் உண்மைகளை வேறொரு நாளில் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 22ம் திகதி அழைத்து உண்மைகளை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...