follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் பொலிஸ் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் பொலிஸ் விசாரணை

Published on

போக்குவரத்து பொலிஸாரின் பணிப்புரையை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் இன்று (21) காலை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, கடமையிலிருந்த பொலிசாருடன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பொலிசார் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கோரினர்.

இதன்போது ஆவணங்களை வழங்க மறுத்ததுடன், பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

இன்று (21) காலை அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...

இந்த வருட இறுதிக்குள் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான...