follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP2மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதி இல்லை - நீதி அமைச்சர்

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதி இல்லை – நீதி அமைச்சர்

Published on

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“அந்த பள்ளிவாசலுக்கு சட்டவிரோதமான பாதைகள் வழியாக வெளியார்களும் நுழைந்துள்ளனர். இதன் போது சிறைச்சாலைக்குள் தொலைபேசிகள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை வீசப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இஸ்லாமிய கைதி ஒருவர் உயிரிழந்தபோது, பெரிய எண்ணிக்கையிலான நபர்கள் பள்ளிவாசல் வழியாகச் சென்றனர். இது, சிறைச்சாலை பாதுகாப்பிற்கும் கைதிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

எனவே, அப்போது சிறைச்சாலை அதிகாரிகளால் பள்ளிவாசல் மூடப்பட்டதை நியாயமாகக் கருத வேண்டும். மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில், அதேபோன்ற பாதுகாப்பு சிக்கல்கள் மீண்டும் எழலாம். பிரிதொரு இடத்தில் காணி வழங்கப்படும் “

அதையடுத்து, அரசாங்கம் தற்போது அந்த பள்ளிவாசலை திறக்க அனுமதி வழங்குவதில்லை என உறுதியாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யுனெஸ்கோ உறுப்பினர் பதவியிலிருந்து அமெரிக்கா விலகியது

யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா இன்று (22) விலகுவதாக அறிவித்தது. இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை...

தேசிய குறைந்தபட்ச சம்பளம் (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி...

தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெறவேண்டிய உரிமை – சம்பள உயர்வு வேண்டுமென்று சஜித் வலியுறுத்தல்

பொதுவான குறைந்தபட்ச சம்பள அதிகரிப்புடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...