follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

Published on

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டிக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை இன்று (21) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டியவுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வீதியில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக, பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான புகையிரத சேவை கடந்த 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர் வடிந்தோடியதையடுத்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதியை இன்று காலை முதல் வாகன போக்குவரத்துக்காக பொலிஸார் திறந்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து, பொலன்னறுவை – மானம்பிட்டிய ரயில் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...