follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

Published on

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டிக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை இன்று (21) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டியவுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வீதியில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக, பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான புகையிரத சேவை கடந்த 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர் வடிந்தோடியதையடுத்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதியை இன்று காலை முதல் வாகன போக்குவரத்துக்காக பொலிஸார் திறந்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து, பொலன்னறுவை – மானம்பிட்டிய ரயில் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...