follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்க காவல்துறையிடமிருந்து மென்பொருள்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்க காவல்துறையிடமிருந்து மென்பொருள்

Published on

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் புதிய மென்பொருள் ஒன்றை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டம் வீதி விபத்துகளை குறைக்கும் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக கொழும்பு நகரில் கடந்த காலப்பகுதியில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மென்பொருளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த புதிய மென்பொருளின் மூலம் கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் கொழும்பில் உள்ள பிரதான CCTV செயற்பாட்டு அறையின் CCTV அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.

அதன்பிறகு, சாரதி வசிக்கும் பிரிவுக்குட்பட்ட காவல்நிலையத்தில் உள்ள காவல்துறையிடம் குற்றம் முறைப்பாடு அளிக்கப்பட்டு அதற்கான அபராதம் சாரதியிடம் இருந்து பெறப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...