follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஇலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் - வர்த்தமானி சிலவற்றுக்கு அனுமதி

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தமானி சிலவற்றுக்கு அனுமதி

Published on

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று (21) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு பெறப்பட்ட அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தக் கட்டளை வெளியிடப்பட்டிருந்ததுடன், பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படுவது காலமாதம் அடைந்ததாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள், முதலீட்டுச் செயற்பாடுகள், புலமைசார் சொத்துக்களின் உரிமைகள், தொலைத்தொடர்பு, ஈ-வணிகம் உள்ளிட்ட துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல்

வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...