follow the truth

follow the truth

February, 14, 2025
Homeஉள்நாடுஇலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் - வர்த்தமானி சிலவற்றுக்கு அனுமதி

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தமானி சிலவற்றுக்கு அனுமதி

Published on

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று (21) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு பெறப்பட்ட அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தக் கட்டளை வெளியிடப்பட்டிருந்ததுடன், பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படுவது காலமாதம் அடைந்ததாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள், முதலீட்டுச் செயற்பாடுகள், புலமைசார் சொத்துக்களின் உரிமைகள், தொலைத்தொடர்பு, ஈ-வணிகம் உள்ளிட்ட துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷவின் மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

தென் கொரிய விசா சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி...

ஜூலி சங் பொஹட்டுவ அலுவலகத்திற்கு

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். திருமதி...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் வைத்திய...