follow the truth

follow the truth

May, 16, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபசில் ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி?

பசில் ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி?

Published on

தற்போதைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ச எதைக் கோரினாலும் அதனை நிறைவேற்றும் நிலையில் ஜனாதிபதி இருப்பதாக ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, பசில் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இன்று நாடு சீனாவின் முன் கடன் வலையில் சிக்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் சீனா இலங்கைக்கு கடன்களை வழங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் போது முழு நாடும் அவற்றை கையகப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக வல்லரசாக கனவு காணும் சீனா, எதிர்காலத்தில் இலங்கையை யுத்த மூலோபாய மையமாக பயன்படுத்தும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...

டயானாவுக்கு தாய்நாடு ‘இலங்கையாம்’

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய விசேட தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்ட டயானா...

ஏழாவது தடவையாகவும் பேச்சுவார்த்தை தோல்வி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என...