follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கொள்கலன் லாரி சாரதிகள் எச்சரிக்கை

கொள்கலன் லாரி சாரதிகள் எச்சரிக்கை

Published on

கொள்கலன் நெரிசலை நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த வாரம் கொள்கலன் லாரி சாரதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பலய’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சங்கம், இந்த நெரிசலைக் குறைப்பதற்கான ஒரே வழி டிஜிட்டல் முறையைப் பின்பற்றுவதே என்று கூறியது.

பல மாதங்களாக நீடிக்கும் கொள்கலன் லாரி நெரிசல் குறித்து பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டிருந்தாலும், இன்னும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கூறுகையில், அனுமதிப் பணிகளின் போது ஏற்படும் சிக்கல்களால் இந்த நெரிசல் ஏற்படுகிறது.

தற்போதுள்ள நெரிசலைக் குறைப்பதற்காக துறைமுகம் அதிக எண்ணிக்கையிலான கொள்கலன்களை ஆய்வு செய்யாமல் வளாகத்திலிருந்து வெளியே அனுப்புவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், துறைமுக வளாகத்திற்குள் எழுந்துள்ள இந்தப் பிரச்சினை குறித்து நேற்று குறித்த நிகழ்ச்சியின் மூலம் விவாதிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...