follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1பாடசாலை மாணவியை மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியை மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

Published on

பெல்மதுல்ல பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபானத்தை அருந்திய குறித்த மாணவி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெல்மதுல்ல நகரில் கார் ஒன்றில் வந்து இறங்கிய 19 வயது மாணவி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை குழுவொன்று விசாரித்துள்ளது.

இதன்போது அவர் மதுபானம் அருந்தியிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காருக்குள் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அந்த நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த நபரை அங்கிருந்த குழுவினர் தாக்கியுள்ளதுடன், அவரை பெல்மதுல்ல பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...