follow the truth

follow the truth

February, 19, 2025
Homeஉலகம்விவசாயிகளின் நலன் கருதி 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம்

விவசாயிகளின் நலன் கருதி 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம்

Published on

தென்கிழக்கு ஆசியாவில் தீவு நாடாக தாய்வான் உள்ளது. மிக சிறிய தீவு நாடான தாய்வானில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விவசாய தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் அந்த நாட்டின் விவசாயிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க தாய்வான் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த நாட்டின் வனத்துறை கணக்கீட்டின்படி 2 லட்சம் உடும்புகளில் இருந்து 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல உள்ளது.

இதற்காக வேட்டைக்காரர்கள் நியமிக்கப்பட்டு ஒரு உடும்புக்கு ரூ.1,300 (15 அமெரிக்க டாலர்) சன்மானமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் முதியோர்களுக்காக சிறப்பு ரயில் அறிமுகம்

நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 'சில்வர்...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? சவுதியில் இன்று அமெரிக்கா – ரஷ்யா பேச்சு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மூன்று ஆண்டை நெருங்கும் இந்த போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப்...

பங்களாதேஷிற்கு நிச்சயம் மீண்டும் திரும்புவேன்- ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு...