follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுக்க அரசு தீர்மானம்

முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுக்க அரசு தீர்மானம்

Published on

குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.

குரங்குகளின் தலையீடு காரணமாக 2024 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான தேங்காய்கள் அழிக்கப்பட்டதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தைக் கணிசமாகப் பாதித்ததாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதனால் குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழில்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு, மற்றும் காவல் துறை உட்பட பல அரச நிறுவனங்கள் குரங்குகளின் கணக்கெடுப்பிற்காக ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...