follow the truth

follow the truth

June, 14, 2025
Homeஉள்நாடுஹிஷாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று

ஹிஷாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று

Published on

ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிசாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

ஹட்டன் – டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று அவரது சரீரம் தோண்டி எடுக்கப்பட்டது.

நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழுவின் முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் சரீரம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய தினம் அவ்வைத்தியசாலையில் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...