follow the truth

follow the truth

June, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"அரசியலில் காணப்படும் சில கழிவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்"

“அரசியலில் காணப்படும் சில கழிவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்”

Published on

அரசியல் தூய்மையை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியம் எனவும், அதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. அரசியல் தூய்மைப்படுத்தல் நடவடிக்கையினையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அரசியலில் காணப்படும் சில கழிவுகளை வெளிப்படுத்த வேண்டும்.

ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் கிரமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், அரசியல் தூய்மையை உறுதி செய்வதற்குச் சட்ட நடவடிக்கைகள் அவசியமாயின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது..” என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து மீதான விசாரணையில் இதுவரை 28 அரச தரப்பு சாட்சியளர்கள் சாட்சியளிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன்,...

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணிலில் கருத்தை கொண்டாடும் ரஷ்ய ஊடகங்கள்

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி...

*தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார்” – இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...