follow the truth

follow the truth

March, 27, 2025
Homeஉலகம்ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

Published on

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் 6 இந்தியர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7.85 லட்சம் கோடி ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானி மேற்பார்வையிட்டு வருகிறார்.

4-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் மிஸ்திரியின் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடி ஆகும். இவர்களின் குடும்பம் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த ஜிண்டால் குடும்பம் 7-வது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.2.43 லட்சம் கோடி ஆகும். இந்த குடும்பம் ஓபி ஜிண்டால் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த பிர்லா குடும்பம் 9-வது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடி ஆகும். 7 தலைமுறைகளாக இந்த குடும்பம் உலோகங்கள், சிமெண்ட் மற்றும் நிதி சேவை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

13-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த பஜாஜ் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி ஆகும். இவர்கள் பஜாஜ் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.

18-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த இந்துஜா குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி ஆகும். இந்த குடும்பம் இந்துஜா குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டார். ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல்...

கார்களுக்கு 25 சதவீத புதிய வரி – டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி...

தென் கொரியாவில் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19...