follow the truth

follow the truth

March, 28, 2025
Homeஉலகம்பிரான்சில் புகழ்பெற்ற அருங்காட்சியகமான பாம்பிடோ மையம் மூடப்பட்டது

பிரான்சில் புகழ்பெற்ற அருங்காட்சியகமான பாம்பிடோ மையம் மூடப்பட்டது

Published on

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது.

தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த பாம்பிடோ மையம் உள்ளது.

1977-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆண்டுக்கு 32 லட்சம் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.

இந்தநிலையில் பராமரிப்பு பணிக்காக இந்த அருங்காட்சியகம் மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு நடைபெறவுள்ள இந்த பராமரிப்பு பணி முடிக்கப்பட்டு வருகிற 2030-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் இந்தியா செல்கிறார் புடின்

ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர்...

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 6 பேர் பலி

செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் . பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன்...

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டார். ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல்...