follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1முன்னறிவிப்பு இன்றி நீர் விநியோகம் துண்டிப்பு - மக்கள் விசனம்

முன்னறிவிப்பு இன்றி நீர் விநியோகம் துண்டிப்பு – மக்கள் விசனம்

Published on

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர நீர் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, தேசிய நீர் வழங்கல் சபையின் பொது மேலாளர் டி. பாரதிதாசன் கூறுகையில், தற்போதைய வறண்ட வானிலை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதை மீட்டெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது மேலாளர் தெரிவித்தார்.

அதுவரை, பவுசர் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...