follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மீனகயா விபத்து - ரயில் சாரதி தொடர்பில் வௌியான தகவல்

மீனகயா விபத்து – ரயில் சாரதி தொடர்பில் வௌியான தகவல்

Published on

கல்ஓயா பகுதியில் விபத்து நடந்த நாளில் மீனகயா கடுகதி ரயிலை வயதான சாரதி ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், அப்போது காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் நயனக ரன்வெல்ல மேலும் கூறுகையில், சாரதி ரயிலை ஓட்டுவதற்கு பொது சேவை ஆணையத்தின் பரிந்துரையைக் கூடப் பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

“இந்த ரயிலை 67 வயதுடைய ஒரு ரயில் சாரதி ஓட்டியுள்ளார், அவருக்கு பொது சேவை ஆணையத்தின் பரிந்துரை கூட இல்லை. அவரது பொருத்தமான பரிந்துரை காலம் ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.. ரயில்வே துறையில் இதுபோன்ற 19 ரயில் சாரதிகள் இருப்பதைக் கண்டோம். அந்த வயதான சாரதி தனது உயர் அதிகாரியின் வாய் வார்த்தையின் பேரில் இந்த ரயிலை இயக்கியுள்ளார். பிமல் ரத்நாயக்கவிற்கு இது பற்றி தெரியாது. “அவருக்கு இது தெரியாவிட்டால், உடனடியாகக் தேடி பார்க்கவும்” என்றார்.

கடந்த 20 ஆம் திகதி இரவு மீனகயா கடுகதி ரயில் மோதி ஏழு காட்டு யானைகள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தப் பிரச்சினை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுப்பதற்கான வெற்றிகரமான தீர்வை அதிகாரிகளால் இன்னும் வழங்க முடியவில்லை.

ரயில்களில் யானைகள் மோதுவதைத் தடுக்க ஒரு தகவல் தொடர்பு அமைப்பின் அவசியம் உள்ளது என்று ரயில்வே மேம்பாட்டிற்கான தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...