follow the truth

follow the truth

August, 18, 2025
Homeஉள்நாடுகணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை

Published on

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சந்தேக நபரின் காதுகளைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டி, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார்.

நேற்றைய(24) நீதிமன்ற அமர்வின் போது, தனது கட்சிக்காரருக்கு குறித்த காது சம்பந்தமான நோய் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

குறித்த நோய் நிலைமை பொலிஸ் காவலில் இருந்தபோது ஏற்படவில்லை என்றும் சந்தேக நபரின் பேரில் ஆஜரான சட்டத்தரணி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடைமுறைப்படுத்தலிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முறையான பொலிஸ் வழிகள் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சட்டத்தரணி, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...