follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP2புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு

புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்(ICRC) பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி திருமதி செவரின் சபாஸுக்கும் (Ms.Severine Chappaz) இடையிலான சந்திப்பு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆதரவை வழங்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அதன்படி, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் திறன் மேம்பாட்டிற்காகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பாடு தெரிவித்தது.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

இன மத பேதமின்றி , ஒரே இலங்கை தேசமாக ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லும் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக “Sri Lankan Day” கொண்டாட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

1989 ஆம் ஆண்டு முதல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி அதற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...