follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Published on

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொலைபேசி தொடர்பு தடுப்பு சாதனங்களின் (Jammer) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது.

அண்மையில் நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் சிறைச்சாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜாமர்கள் (Jammer)பொருத்தப்பட்டுள்ள நிலையில், கட்டிடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முழுமையாக முடக்க முடியவில்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜாமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளை சீரமைக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கும் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜாமர்களின் குறைபாடுகள் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளி தரப்பினருடன் உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும் சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் தங்கியிருந்து கைதிகள் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச்செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பூஸ்ஸ போன்ற தீவிர சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் குற்றவியல் வலையமைப்பை பாதுகாப்பாக நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்பது இரகசியமல்ல.

நாட்டில் 28 சிறைகள் உள்ளன, அவற்றில் 10 திறந்தவெளி சிறைகள்.

அந்த 28 சிறைகளில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 29,500. அவர்களில் 1,200 பேர் பெண் கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...