follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தி குறித்து அறிவிப்போருக்கு 10 இலட்சம் பணப்பரிசு

கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தி குறித்து அறிவிப்போருக்கு 10 இலட்சம் பணப்பரிசு

Published on

பாதாள உலகக் குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்லே சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 05 ஆம் இலக்க நீதிமன்ற அறையில் சுட்டுக் கொல்ல திட்டமிடப்பட்டதாக நம்பப்படும் பிங்புர தேவகே இஷார செவ்வந்தியை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம்) ரொக்கப் பரிசு வழங்க பதில் பொலிஸ்மா மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

சந்தேக நபருக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றும், அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறை அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டும், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியும், கடல் வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...