follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபர் தான் காவலில் உள்ளவரா என்பதை அறிய விசாரணை

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபர் தான் காவலில் உள்ளவரா என்பதை அறிய விசாரணை

Published on

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்தக் கொலையைச் செய்தாரா என்பது குறித்து எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, அன்றைய தினம் நீதிமன்றத்தின் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் சந்தேக நபரின் முகத்தை அடையாளம் காண சிறப்பு பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலதிகமாக சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் டி.என்.ஏ.க்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும், காவல்துறைக்கு வெளியே உள்ள நிபுணர்களிடமிருந்தும் ஆதாரங்கள் பெறப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் காண போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பத்தரமுல்ல, சுஹுருபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான ஆதாரமாக அன்றைய தினம் சந்தேக நபர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி இருப்பதாகவும், மேலதிகமாக அவர் அகற்றப்பட்ட இடத்திலிருந்து அன்று அவர் அணிந்திருந்த ஆடைகள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.

கொலைக்கு முன்னர் சந்தேக நபர் தங்கியிருந்த தங்குமிடத்திலிருந்து ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காணொளிகள், தற்போது போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் காட்சிகள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...