follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1எரிபொருள் தட்டுப்பாடு இல்லை, வதந்திகள் வேண்டாம்

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை, வதந்திகள் வேண்டாம்

Published on

நாட்டில் எந்வொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நாட்டில் எரிபொருள் தீர்ந்து போவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. வதந்திகளுக்குப் பயந்து மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்றால்தான் இந்தப் பிரச்சினை எழும்” என்றார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்காக பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% கொடுப்பனவு நேற்று முதல் இரத்துச் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...