follow the truth

follow the truth

March, 16, 2025
HomeTOP1உள்நாட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசு முயற்சி

உள்நாட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசு முயற்சி

Published on

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சதாநாயக்க, இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் 3 சதவீத கழிவுக் கொடுப்பனவு குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், லங்கா ஐஓசி நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அழுத்தங்கள் காரணமாக, ஒரு முன்பதிவுக்கு 35,000 ரூபா நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் கோசல விதானஆராச்சி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும்...

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை (VIDEO)

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...