follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP2காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை தடுத்த இஸ்ரேல்

காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை தடுத்த இஸ்ரேல்

Published on

காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இஸ்ரேலின் குறித்த மனிதாபிமானத் தடையானது காஸாவில் உள்ளவர்களை ஆபத்தில் தள்ளும் செயற்பாடாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

நிரந்தர போர் நிறுத்தமானது எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு பங்களிப்பதுடன், காஸாவில் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்குமான வாய்ப்பாக அமையும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமையானது சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...