follow the truth

follow the truth

August, 18, 2025
HomeTOP1சந்தையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தரமற்ற தேங்காய் எண்ணெய்

சந்தையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தரமற்ற தேங்காய் எண்ணெய்

Published on

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தரமற்ற தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யும் செயற்பாடுகளில் சில இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கணிசமான வருவாய் ஈட்டிய சில நிறுவனங்கள் 11 மாதங்களில் தங்களின் நிறுவனங்களை மூடியுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், அதனூடாக மோசடிகளைத் தடுப்பதற்கு வலுவான விதிகள் கொண்டு வரப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...