follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1அதிவேக வீதிகளுக்கு மீண்டும் விசேட அதிரடிப்படையினர்

அதிவேக வீதிகளுக்கு மீண்டும் விசேட அதிரடிப்படையினர்

Published on

அதிவேக வீதிகளுக்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நேற்று (11) இரவு முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.எம்.பி. சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதிகளில் திடீர் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணைந்ததாக பாதுகாப்பு அமைச்சினால் ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த கடமையில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அகற்றப்பட்டனர்.

அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீட்டிப்பு, கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதி, புதிய களனி பாலம் மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால், உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்கு இந்த அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...