follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1பாடசாலை கிரிக்கெட் போட்டி - விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

பாடசாலை கிரிக்கெட் போட்டி – விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

Published on

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

தங்கள் பாடசாலையின் கௌரவத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போது, நாட்டில் பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மீண்டும் ஒருமுறை அறிவுறுத்த வேண்டிய அவசியத்தை நாங்கள் காண்கிறோம்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவங்களை நாம் அனைவரும் அறிவோம். உயிரிழப்புகள், கடுமையான விபத்துக்கள், வன்முறை சம்பவங்கள் போன்ற விடயங்களை குறிப்பிடலாம். இது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

போட்டி ஏற்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸாரை சந்தித்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதனூடாக இந்த செயல்பாடுகளை இடையூறு இல்லாமல் மேற்கொள்ள முடியும். உங்கள் பாடசாலையின் கெளரவத்தை பாதுகாக்க அனைவரும் செயற்படுதல் அவசியமாகும் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் வெளியானது

உள்ளூராட்சி நிறுவனங்களில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான திகதிகள் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தபால் வாக்குச்...

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று...