follow the truth

follow the truth

August, 17, 2025
Homeவிளையாட்டுமாத்தறை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில்

மாத்தறை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில்

Published on

மாத்தறை பொல்ஹேன சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை மற்றும் மைதானத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான முதற்கட்டப் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்மொழியப்பட்ட நிலத்தின் அறங்காவலரான அமரபுர தர்மரக்ஷித நிகாயவின் மகாநாயக்கர் ஆனந்த மஹிமியன், இலங்கை கிரிக்கெட் சார்பாக ஷம்மி டி சில்வா, சனத் ஜெயசூரிய மற்றும் சுஜீவ கோடலியத்த, மாத்தறை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிதி ஒதுக்கிய போதிலும் இன்னும் புதுப்பிக்கப்படாத சனத் ஜெயசூர்யா மைதானத்தின் புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...